கோட்டஅளவிலான விவசாயிகள்குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது

65பார்த்தது
வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில்; 18. 06. 2024 அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்                    முனைவர் வீ. ப. ஜெயசீலன். , இ. ஆ. ப. , அவர்கள் தகவல்.
-----

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் 18. 06. 2024 அன்று முற்பகல் 11. 00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு         மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன். கேட்டுக்கொண்டுள்ளார்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி