பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து: இருவர் பலி

62பார்த்தது
பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து: இருவர் பலி
மதுரையில் பெண்கள் தங்கும் விடுதியில் பிரிட்ஜ் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பெண்கள் தங்கும் விடுதியில் இன்று (செப்டம்பர் 12) அதிகாலையில் பிரிட்ஜ் வெடித்தது. உடனே விடுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவசரமாக வெளியேறினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இருவர் வழியிலேயே உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி