விபத்து நடந்த பட்டாசு ஆலை உரிமம் ரத்து

1556பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் நேற்று (ஜூன் 29) காலையில் மருந்து கலவையின் போது ஏற்பட்ட வெடி ிபத்தில் அங்கு பணியகல் இருந்த அச்சங்குளதாதை சேர்ந்த ராஜ்குமார் (41), நடுச்சூரங்குடியை மாரிச்சாமி (40) சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (35), மோகன் வயது (31) ஆகியோர் சம்பவ இடத்திலே உடல் கருகி பலியானார்கள். இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஆலை உரிமையாளர்கள் சகாதேவன், அவரது மகன் குருசாமி பாண்டி ஆகிய இருவரையும் தேடி வந்த நிலையில் நேற்று (ஜூன் 29) இரவு குருசாமி பாண்டியனை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் சகாதேவனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பட்டாசு ஆலையில் நடந்த விதி மீறல் காரணமாகதான் வெடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என விசாரணையில் தெரியவரவே ஆலையின் உரிமத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் ரத்து செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி