ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

1057பார்த்தது
ராஜபாளையத்தில் கிராம நிர்வாகத்தினர் நான்கு வருடங்களாக 11 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செல்லம் வடக்கு மற்றும் தெற்குத் தெரு பகுதியைச் சேர்ந்த 11 குடும்பங்களை கடந்த நான்கு ஆண்டுகளாக ஊரை விட்டு கிராம நிர்வாகத்தினர் ஒதுக்கி வைத்துள்ளனர். இது தொடர்பாக மதுரை ஹைகோர்ட் கிளையில் 2023 வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நிர்வாகத்தினர் யாரையும் ஒதுக்கி வைக்கவில்லை. சரி சமமாகத்தான் பழகி வருகிறோம். சாவடி மற்றும் கோவிலுக்குள் அனுமதிக்கிறோம் என்று வாக்குமூலம் கொடுத்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு 14-4-2024ஆம் தேதி அன்று நடந்த சித்திரை வெண்குடை திருவிழா முடிந்தவுடன் பொதுபண்டை சார்ந்தவர்களுக்கு ஊர் சுருள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி எங்கள் தரப்பைச் சேர்ந்த 11 குடும்பங்களை சேர்ந்த பெண்கள் ஊர் சாவடிக்கு சென்று சுருள் கேட்டபோது கொடுக்க முடியாது என தரைக்குறைவாக பேசி நிர்வாகத்தினர் அனுப்பி வைத்துவிட்டனர். மேலும் அந்த 11 குடும்பங்களை சேர்ந்தவர்களின் நல்ல விஷயங்களிலும், கெட்ட விஷயங்களிலும் கிராமப்பொது மக்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்று முடிவெடித்து 11 குடும்பங்களை ஒதுக்கி வைத்து விட்டனர்

இது தொடர்பாக கடந்த 26-4-2024ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் மனுவை காவல்துறை திறப்பு இது சம்பந்தமாக சமாதானம் கூட்டம் நடத்துவதாக வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 3-5-2024ஆம் தேதி அன்று அனுப்பிவிட்டனர். ஆனால் வட்டாட்சியர் மனுவை கண்டு கொள்ளவில்லை. எனவே முதல் வரின் தனி பிரிவிற்கு சம்பந்தமாக கடந்த 18.5.24 அன்று புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த 7.6.2024ம் தேதி வட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் போடப்பட்டது. ஆனால் எதிர்தரப்பை சேர்ந்த ஊர் நிர்வாகிகள் இதில் கலந்து கொள்ளவில்லை. எனவே வட்டாட்சியர் ஒரு வாரத்தில் எதிர் தரப்பை மீண்டும் அழைத்து சமாதான கூட்டம் போடுவதாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த கூட்டமும் நடைபெறவில்லை. எதிர்த் தரப்பினர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருங்கள் என்று வட்டாட்சியர் கூறுகிறார்.

வருவாய் வட்டாட்சியர் இந்த விஷயத்தில் கடமையை நேர்மையாக செய்ய மறுக்கிறார். எனவே இது சம்பந்தமாக நீதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி