நூல் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து பஞ்சு பொதிகள் சேதம்.

4396பார்த்தது
நூல் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து பஞ்சு பொதிகள் சேதம்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தம்பி பட்டியில் உள்ள நூல் தயாரிக்கும் ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது சத்திரப்பட்டி சேர்ந்த முத்துமணி என்பவர் நூல் தயாரிக்கும் ஆளை நடத்தி வருகிறார் மேலும் மாலையில் அதிக மின்னழுத்தும் காரணமாக கம்பரசர் வெடித்து சிதறியதில் இருந்து தீப்பொறிகள் பரவியதால் தீ நூல் தயாரிக்கும் அறை முழுவதும் வேகமாக பரவியது.

மேலும் அங்கிருந்து வேலை செய்த பணியாளர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பெயரில் விரைந்து வந்த வத்திராயிருப்பு தீயணைப்புத் துறை மீட்புக் குழுவினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு பொதிகள் மற்றும் ஒரு சில இயந்திரங்கள் தீயில் எறிந்து சேதமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது இதுகுறித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி