1500ரூபாய் 21500ரூபாய் வழங்க வங்கி நிர்வாகத்திற்கு அதிரடி

59பார்த்தது
*1500 ரூபாய்க்கு 21, 500 ரூபாய் வழங்க வங்கி நிர்வாகத்திற்கு அதிரடி உத்தரவிட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி*

கடந்த 2022 ஆம் ஆண்டு சாத்தூரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் அதே பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் கணக்கு துவங்கி அதில் 1500 ரூபாய் பணம் செலுத்தியுள்ளார்.

பின்பு பணத்தை எடுக்க முயன்ற போது அதில் பணம் இல்லை என தெரியவந்தது. இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர்குறைதீர் ஆணையத்தில் மாரிமுத்து வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சக்கரவர்த்தி மாரிமுத்து வங்கிக் கணக்கிலிருந்து 1500 ரூபாயை செலுத்த வேண்டும் எனவும், மன உளைச்சலுக்கு 10, 000 ரூபாயும், வழக்கு செலவு தொகை 10, 000 ரூபாயும் வழங்க வேண்டும் எனசாத்தூர் இந்தியன் வங்கி கிளை மேலாளருக்கு அதிரடி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி