சிவகாசி: டிரான்ஸ்போர்ட் குடோனுக்கு வருவாய் துறையினர் சீல்..

51பார்த்தது
சிவகாசியில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட லாரி ட்ரான்ஸ்போர்ட் குடோனுக்கு சீல் வைத்த வருவாய் துறை அதிகாரிகள்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி சசி நகரைச் சேர்ந்த கூடலிங்கம் என்பவர் வேலாயுதம் சாலையில் தற்காலிக தகர செட் அமைத்து உரிய அனுமதி இல்லாமல் தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசுகளை லாரி மூலம் அனுப்பும் லாரி செட் நடத்தி வந்துள்ளார். இதுகுறித்து வருவாய்த்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் மற்றும் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உரிய அனுமதி இல்லாமல் லாரி செட் செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 450 பட்டாசு பண்டல்களோடு லாரி செட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி அரசின் அனுமதி இல்லாத கட்டிடங்களில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தால் பட்டாசுகளை பறிமுதல் செய்வதுடன், கட்டிடங்களுக்கும் சீல் வைப்பதோடு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் மற்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி