சிவகாசி: பலத்த கனமழை. வீட்டிற்குள் மழைநீர்..

62பார்த்தது
வீட்டிற்குள் மழைநீர்.
சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை.
பல நாட்களுக்குப் பின் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல்.
விருதுநகர் மாவட்டம்,.
சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு நேரத்தில் திடீரென
கருமேகங்கள் சூழ்ந்து சிவகாசி, M. புதுப்பட்டி, சுக்கிவாரர்பட்டி, அதிவீரம்பட்டி, செங்கமலப்பட்டி, மீனம்பட்டி, சித்துராஜபுரம், ரிசர்வ் லயன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக நகரின் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மேலும் சுக்கிவாரர்பட்டியிலுள்ள பல இடங்களில் தாழ்வான வீடுகளில் மழை நீர் புகுந்து தெப்பம் போல் காட்சியளித்தன. சிவகாசியில் பல நாட்களுக்குப் பின்னர் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. ‌

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி