ராணுவ வீரருக்கு ஆட்சியர் மரியாதை

62பார்த்தது
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே மேலாண் மறைநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பொன் பாண்டியன் இந்திய ராணுவத்தில் ஹவில் தாராக பணிபுரிந்து வந்தார். தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் போர் ஒத்திகை பயிற்சியின் போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று சொந்த கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்று. இதில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தி ராணுவவீரரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி