விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஏழாயிரம்பண்ணை சாலை தூங்காரெட்டிபட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன நதனிக்கையில் இருந்த போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி வாகனத்தை ஓட்டி வந்த விளத்திகுளம் வட்டம், மந்திகளத்தை சேர்ந்த ஆதிமுத்து (32), என்பவரை சோதனை செய்த போது
அவர் வைத்திருந்த பையில் ரூ. 81, 500 இருப்பதை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரணை செய்ததில் பணத்திற்கு எந்த வித ஆவனங்கள் இல்லாததால் அதை பறிமுதல் செய்து சாத்தூர் வட்டாட்சியர் லோகநாதனிடம் ஒப்படைத்தனர்.