அரசு அனுமதியில்லாமல் மது விற்பனை செய்த 4 பேர் கைது

56பார்த்தது
அரசு அனுமதியில்லாமல் மது விற்பனை செய்த 4 பேர் கைது
விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் நகர் காவல் நிலைய ஆய்வாளர்
ஆதிலிங்க போஸ் மற்றும் காவலர்கள் சாத்தூர் நகர் பகுதியில் திருட்டு மது விற்பனையை தடுக்கும் பொருட்டு ரோந்து பணியில் இருந்த போது கிடைத்த ரகசிய தகவலில் படந்தால் அனுமான் நகர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் உள்ள மது பான கூடத்தில் சோதனை செய்த போது விற்பனை க்கு அனுமதி இல்லாத நேரத்தில் மது விற்பனை செய்த பார் உரிமையாளர் படந்தாலை சேர்ந்த முத்துராஜ்(41), செல்வராஜ் (48)ஆகியோரை கைது செய்த அங்கு விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்கள் 33, மது விற்பனை செய்த பணம் ரூ. 11600 பறிமுதல் செய்தனர். அதேபோல் மேட்டமலை அருகே உள்ள அரசு மதுபான பாரில் அனுமதியில்லா நேரத்தில் மது விற்ற மேட்டமலையை சேர்ந்த ஆறுமுகம் (53), சேகர்( 57) ஆகியோரை கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த 49 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி