இராஜபாளையம்: கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது....

83பார்த்தது
இராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் கைது. 25 கிராம் கஞ்சா பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் அருகே உள்ள பச்சை மடம் ஊரணி பகுதியில் கம்மாப்பட்டி பகுதியை சேர்ந்த தங்கேஸ்வரன் (25) மற்றும் விஜய் (24) ஆகிய இருவரும் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது ஊரணி அருகே சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த இரண்டு பேரை சோதனை செய்த போலீஸார் விற்பனைக்காக கையில் வைக்கப்பட்டிருந்த 25 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து தெற்கு காவல் நிலையத்தில் விஜய், தங்கேஸ்வரன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி