திறக்கப்படாமல் உள்ள சுகாதார வளாகம்

59பார்த்தது
திறக்கப்படாமல் உள்ள சுகாதார வளாகம்
அருப்புக்கோட்டை வேலாயுதபுரம் கந்தசாமி தெருவில் சுமார் 10 வருடங்களுக்கு முன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்ட நாளிலிருந்து திறக்கப்படாமல் உள்ளது. இப்பகுதியில் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டுகளாக திறக்கப்படாத இந்த சுகாதார வளாகத்தில் அரசு நிதி வீணாவதோடு பொதுமக்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள இந்த சுகாதார வளாகத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி