சேரும் சகதியுமான சாலையால் அவதிப்படும் பொதுமக்கள்

60பார்த்தது
சேரும் சகதியுமான சாலையால் அவதிப்படும் பொதுமக்கள்
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி திருக்குமரன் நகர் 7வது தெரு பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பெய்த கன மழை காரணமாக பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் இப்பகுதியில் சாலை சீரமைப்பிற்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் அப்பகுதி வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் சேரும் சகதியுமான சாலையில் வழுக்கி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. ‌ தண்ணீர் வாகனம் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனங்களும் அப்பகுதியில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ‌ இதனால் அப்பகுதி மக்கள் கடுமையான சிரமம் அடைந்துள்ளனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ‌

தொடர்புடைய செய்தி