வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் பேச்சு

83பார்த்தது
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ உடன் இணைந்து திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். ‌ அருப்புக்கோட்டை நகர் பகுதிகளான நெசவாளர் காலனி, மதுரை ரோடு, காந்தி மைதானம், சிவன் கோவில் சந்திப்பு, பாவடி தோப்பு, திருநகரம், பாம்பே மெடிக்கல் சந்திப்பு, சொக்கலிங்கபுரம், வெள்ளக்கோட்டை, தெற்குத்தெரு ஆகிய பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ மற்றும் மாணிக்கம் தாகூர் இருவரும் இணைந்து நன்றி தெரிவித்தனர். அப்போது பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்த மக்களுக்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும்,
அருப்புக்கோட்டையில் அடுத்த பத்து தினங்களுக்குள் அனைத்து பகுதிகளிலும் தாமிரபரணி குடிநீர் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறி நன்றி தெரிவித்தார்.
இதில் முன்னாள் சேர்மன் சிவப்பிரகாசம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி