போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது வழக்கு பதிவு

59பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடி ஊரணியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவதாக புகார் தெரிவித்து வடக்கு ஒன்றிய பாஜகவினர் நேற்று ஜீலை 4 பாளையம்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‌ அப்போது வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இந்நிலையில் அரசுக்கு எதிராக கோஷமிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக போராட்டம் நடத்திய, வடக்கு ஒன்றிய பாஜக தலைவர் நாகராஜன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல், மாவட்ட பொது செயலாளர் ராமஜெயம் உள்ளிட்ட பாஜகவினர் 63 பேர் மீது டவுன் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி