மாவட்டத்தில் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்

55பார்த்தது
மாவட்டத்தில் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்
தமிழ்நாடு அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை போக்கிடும் வகையில் பணிபுரிபவர்கள், படித்து வருபவர்கள், சுயதொழில் புரிபவர்கள் ஆகியோருக்கு 3 சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் 157 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க அரசால் நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. இவற்றில் முதல்கட்டமாக 14 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத் தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூடுதல் கலெக் டர் ஸ்ருதஞ் ஜெய்நாராயணன் கலந்துகொண்டு 14 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 96, 011 மதிப் பில் 3 சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்களை இலவச மாக வழங்கினார். இதில் திண்டிவனம் சப்- கலெக்டர் திவ்யான்ஷூ நிகம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி