இலைகள் வீட்டில் விழுந்ததால் தாக்குதல் 3 பேர் மீது வழக்கு

59பார்த்தது
விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள், 53; டைலர். கடந்த 9ம் தேதி, இவரது வீட்டில் உள்ள மரத்திலிருந்து, காய்ந்த இலைகள், காற்றில் பறந்து பக்கத்து வீட்டில் விழுந்துள்ளது. அடிக்கடி இலைகள் விழுந்ததால், ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த அன்பழகன், 50; பிளேமினால், முனியம்மாள் ஆகியோர், கலியபெருமாளை திட்டியதோடு, அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து, கலியபெருமாள் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் அன்பழகன் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி