மகள் மாயம் தந்தை காவல் நிலையத்தில் புகார்

73பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், காணை அடுத்த கோழிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகள் புஷ்பா, 20; இவர், கடந்த 5ம் தேதி வீட்டிலிருந்து விழுப்புரத்தில் உள்ள வங்கிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி