ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு போலீசார் விசாரணை

1510பார்த்தது
ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு போலீசார் விசாரணை
விழுப்புரம் அருகே ஆயந்தூர் கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் லட்சாதிபதி. இவரது மகன் அஜித் (20). பூக்கடையில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் தனது பெற்றோருடன் சண்டையிட்டு கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் தோகைபாடி அருகே உள்ள ரயில்வே தண்ட வாளத்தில் ரயில் மோதி உடல் சிதைந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதை கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அஜித் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல் வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி