திருச்சியிலிருந்து, நேற்று சென்னை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பஸ்சை கடலுாரைச் சேர்ந்த ராம்கி, 45; என்பவர் ஓட்டிச்சென்றார். அதிகாலை 5: 30 மணியளவில் விழுப்புரம் புறவழிச்சாலையில் சென்றபோது, திருவாமாத்துார் சந்திப்பில், முன்னால் சென்ற மற்றொரு ஆம்னி பஸ்சின் பின்னால் மோதியது. இந்த விபத்தில், டிரைவர் ராம்கி, சென்னையைச் சேர்ந்த அப்துல்ரஹ்மான் மனைவி ஆயிஷாபேகம், 45; உட்பட 10 பேர் காயமடைந்தனர். இவர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டனர். விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.