விக்கிரவாண்டியில் டி. எஸ். பி. , அலுவலகம் திறக்க தீவிரம்

78பார்த்தது
விக்கிரவாண்டியில் டி. எஸ். பி. , அலுவலகம் திறக்க தீவிரம்
விக்கிரவாண்டி தாலுகாவில் புதிய துணை உட்கோட்டம் பிரிக்கப்பட்டு, விக்கிரவாண்டி, பெரியதச்சூர், கண்டமங்கலம், வளவனுார், விக்கிரவாண்டி போக்குவரத்து பிரிவு மற்றும் செஞ்சி டி. எஸ். பி. , அலுவலகத்திலிருந்து கெடார், கஞ்சனுார் ஆகிய 7 போலீஸ் ஸ்டேஷன்களை உள்ளடக்கி விக்கிரவாண்டி டி. எஸ். பி. , அலுவலகம் செயல்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த மாதம் புதிய டி. எஸ். பி. , யை நியமித்து டி. ஜி. பி. , சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து விக்கிரவாண்டியில் புதிய டி. எஸ். பி. , அலுவலகம் திறக்க இடம் தற்காலிகமாக வெங்கடேஸ்வரா நகரில் மெயின்ரோட்டில் தனியாருக்கு சொந்தமான இடத்தினை வாடகைக்கு பேசி அலுவலகம் திறப்பதற்கான பணிகளை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த வார இறுதிக்குள் புதிய அலுவலகம் திறந்து டி. எஸ். பி. , அலுவலகம் செயல்படும் என போலீஸ் வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி