விழுப்புரம் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த சொர்ணாவூர் கீழ்பாதி, தென்பெண்ணை ஆற்றில், மணல் திருட்டு நடப்பதாக எழுந்த புகாரின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ராமு மகன் அய்யனார், 28; என்பவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.