ஆரோவில் அருகே திருட்டு போலீசார் விசாரணை

75பார்த்தது
ஆரோவில் அருகே திருட்டு போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், நாவற்குளம் எம்ஜிஆா் வீதியைச் சோ்ந்தவா் நாகராஜன் மகன் சிவராமன், (39). இவா் நாவற்குளம் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளாா். இந்நிலையில் புதன்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றாா். வியாழக்கிழமை காலை மீண்டும் ஸ்டுடியோவுக்கு வந்தவா், கதவு உடைக்கப்பட்டிருந்த நிலையில் உள்ளே வைத்திருந்த டிஜிட்டல் கேமரா மற்றும் மின்னணு பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தொடர்புடைய செய்தி