பேருந்துக்காக காத்திருந்த மக்களை கடித்த தெருநாய்கள்

1040பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள, பேருந்து நிலையத்தில் பேருந்து ஏறகாத்திருந்த ஆண், பெண் உள்ளிட்ட 20 மேற்பட்டோர் காத்திருந்தனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்கள் பேருந்துக்காக காத்திருந்தவர்களை கடிக்க தொடங்கியது. இதனால் பதறிப்போன மக்கள் அலறவே அப்பகுதிவாசிகள் விரைந்து வந்து நாய்களை துரத்தினர்.

இருப்பினும் நாய்கள் அங்கிருந்தவர்களை ஏற்க்குறைய கடித்தது. காயம் அடைந்தவர்கள் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பதாலும், நாய்களால் விபத்துகள் ஏற்படுவதாலும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி