சவுக்கு மரம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

60பார்த்தது
சவுக்கு மரம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
திண்டிவனம் அடுத்த பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி, 41; இவர், அதே பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் சவுக்கு நட்டிருந்தார். இவருடைய நிலத்திற்கு பக்கத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம், 50; என்பவர் 3 ஏக்கர் பரப்பளவில் சவுக்கு நட்டிருந்தார். நேற்று பிற்பகல் 2: 30 மணியளவில், நிலத்திற்கு மேற்பகுதியில் சென்ற மின் கம்பிகளில் உராய்வு ஏற்பட்டு சவுக்கு மரங்களில் தீ பற்றியது. தகவலறிந்து வந்த திண்டிவனம் தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி