வாகனம் மோதி வாலிபர் பலி

74பார்த்தது
வாகனம் மோதி வாலிபர் பலி
திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற வாலிபர் இறந்தார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் பாரதி, 21; சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து பைக்கில் அழகாபுரிக்கு சென்று கொண்டிருந்தார்.

திண்டிவனம் அடுத்த பாஞ்சாலம் கிராமம் அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

படுகாயமடைந்த பாரதி திண்டிவனம் அரசு மருத்துவனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி