திண்டிவனம் தட்சசீலா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு போட்டி

81பார்த்தது
திண்டிவனம் தட்சசீலா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு போட்டி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஓங்கூர் தட்சசீலா பல்கலைக்கழகத்தில் கேலோ தட்ச சீலா '24' என்ற தலைப்பில் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கிரிக்கெட், கால்பந்து, கைபந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் தொடர்ந்து ஒருவாரம் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டு போட்டியிட்டனர். தொடர்ந்து இதன் நிறைவு விழாவானது பல்கலைக்கழக விழாப்பேரரங்கில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் தனசேகரன் தலைமை தாங்கி, படிப்பு டன், விளையாட்டும் ஒருங்கிணைந்ததாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார். முன்னதாக இணை வேந்தர்கள் ராஜராஜன், டாக்டர் நிலா பிரியதர்ஷினி, துணைவேந்தர் விவேக் இந்தர்கோச்சர், பதிவாளர் செந்தில் ஆகியோர் போட்டியில் பங்கேற்றவர்களை வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினராக ஆசிய விளையாட்டில் பெண்கள் கபடியில் தங்கம் வென்றவரும், தற்போதைய இந்திய பெண்கள் கபடி அணி யின் பயிற்சியாளரும், தாயான்சந் விருது பெற்றவருமான கவிதா செல்வராஜ் கலந்துகொண்டு, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற பேரா. லதா கண்ணன் தலைமையிலான நீல நிறக்குழுவினர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி