மரக்காணத்தில் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஒருவர் பலி

1077பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பனிச்சமேடு குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி புதுச்சேரி அரசு பேருந்து 20 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. அப்போது பனிச்சமேடு குப்பம் பகுதி அருகே பேருந்து ஓட்டுனர் முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்புறமான மரக்காணம் பகுதியிலிருந்து மினிலோடு வேனில் சோப்பு ஏற்றி கொண்டு வந்த வாகனத்தின் மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் மினி லோடு வேனை ஓட்டி வந்த ஓட்டுனர் புதுச்சேரி சுதானா நகரை சார்ந்த லட்சுமிநாராயணன் வயது 55 என்பவர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து விபத்து குறித்து தகவலறிந்து வந்த மரக்காணம் போலீசார் விபத்தில் சிக்கி கொண்ட மினி லோடு வேனை சாலையின் ஓரத்திலிருந்து அப்புறப்படுத்தி மினி லோடு வேனில் சிக்கி கொண்ட சோப்பு வியாபாரியின் உடலை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டு புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தினால் சென்னை - புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதையடுத்து போக்குவரத்தினை போலீசார் சரி செய்தனர். விபத்து குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி