மயிலம் அடுத்த ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 47வது ஆண்டு விழா நடந்தது.
கென்னடி கல்விக்குழும தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் சந்தோஷ் ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக இ. எஸ். , கல்விக் குழுமத் தலைவர் செல்வமணி, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து, கடந்தாண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கினார்.
விழாவில், பள்ளியில் 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.