இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது பெண் மயிலம் போலீசில் புகார்

73பார்த்தது
மயிலத்தில் உள்ள ரிச் இந்தியா நகர் என்ற இடத்தில் கடந்த 26 10 2023 அன்று பத்ரகாளிஸ்வரி சக்தி பீடம் உழவாரப்பணி குழுவின் நிறுவனர் ஈஸ்வரி என்பவரிடம் ரூ. 2, 40, 000 பெற்றுக் கொண்டு இந்து மக்கள் கட்சி ஆன்மீகப் பிரிவு பொதுச் செயலாளராக உள்ள கீழ் மயிலம் பகுதியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது நண்பரான செல்லப்பாண்டி ஆகியோர் இரண்டு வீட்டு மனைகள் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் அந்த வீட்டுமனைகள் DTCP அப்ரூவல் பெறப்படவில்லை என குற்றம் சாட்டும் ஈஸ்வரி அதில் ஒன்றை மட்டும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் சக்திவேலின் உறவினரை பயன்படுத்தி போலியாக பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளதாகவும், மற்றொன்றை இது நாள் வரை பத்திரப்பதிவு செய்து தரப்படவில்லை என்பதால் சக்திவேலை தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்ட ஈஸ்வரிக்கு எவ்வித பதிலும் கூறாமல், அவரது சாதி குறித்து அவதூறாக பேசியதாக ஈஸ்வரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் மயிலம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தார்.

இதனைத் தொடர்ந்து ஈஸ்வரியின் புகார் மனுவை மயிலம் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்தச் சம்பவம் மயிலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி