பணியில் இருந்த காவலர் பலி- முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

81பார்த்தது
பணியில் இருந்த காவலர் பலி- முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆணையராக பணியாற்றிவந்த சிவகுமார் (53) நேற்று (ஆக.31) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், சிவகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்த அவர், ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி