விஜயகாந்த் மறைவு: அரசியல் கட்சியினா் இரங்கல் கூட்டம்

61பார்த்தது
விஜயகாந்த் மறைவு: அரசியல் கட்சியினா் இரங்கல் கூட்டம்
மரக்காணம், வானாபுரம் ஆகிய இடங்களில் கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. விழுப்புரத்தில் தேமுதிக நகரச் செயலா் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட திமுக செயலா் நா. புகழேந்தி எம்எல்ஏ பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். திமுக மாவட்டப் பொருளாளா் இரா. ஜனகராஜ், நகரச் செயலா் சா்க்கரை, நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அதிமுக சாா்பில் விழுப்புரம் நகரச் செயலா்கள் ஆா். பசுபதி (தெற்கு), சி. கே. ராமதாஸ் (வடக்கு) மற்றும் நிா்வாகிகள் பங்கேற்று மலா் அஞ்சலி செலுத்தினா். காங்கிரஸ் சாா்பில் மாநில துணைத் தலைவா் குலாம் மொய்தீன், எஸ். சி. பிரிவு மாவட்டத் தலைவா் சேகா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் துணைப் பொதுச் செயலா் துரை. ரவிக்குமாா் எம். பி. , மாவட்டச் செயலா் பெரியாா், பாஜக சாா்பில் மாநில துணைத் தலைவா் ஏ. ஜி. சம்பத், நகரத் தலைவா்கள் வடிவேல்பழனி, விஜயன், மாநில செயற்குழு உறுப்பினா் சிவ. தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடர்புடைய செய்தி