அக்னி வசந்த பெருவிழா ஏழாம் நாள் உற்சவம்

81பார்த்தது
திண்டிவனம் அடுத்த இரட்டணை திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த பெருவிழாவின் ஏழாம் நாள் உற்சவத்தை முன்னிட்டு மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் இரட்டணை கிராமம் அருள்மிகு திரவுபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த பெருவிழாவின் முதலாவது நாள் துவஜாரோகனம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. ஏழாம் நாள் நிகழ்ச்சியில் அரங்கேற்றமும், அம்மன் பிறப்பும் என்ற ஆன்மீக சொற்பொழிவும், நாடகமும் நடைபெற்றது. இரவு தர்மராஜர், திரவுபதி அம்மன் சமேதராய் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மின்விளக்குகளால் ஜோடிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி