அ. தி. மு. க. , வேட்பாளருக்கு கரசானுாரில் ஓட்டு சேகரிப்பு

83பார்த்தது
அ. தி. மு. க. , வேட்பாளருக்கு கரசானுாரில் ஓட்டு சேகரிப்பு
விழுப்புரம் லோக்சபா தொகுதியில் அ. தி. மு. க. , வேட்பாளர் பாக்யராஜ் போட்டியிடுகிறார். இவருக்காக நேற்று கரசானுாரில் அ. தி. மு. க. , ஒன்றிய துணைச் செயலாளர் கணேசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அப்பகுதியில் ஓட்டு சேகரித்தனர்.

அப்போது, அ. தி. மு. க. , ஆட்சியில் பழனிசாமி தலைமையில் செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்தும்; தற்போதைய தி. மு. க. , அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாமல் ஏமாற்றியது குறித்தும் பொது மக்களிடம் கூறி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு துண்டு பிரசுரம் வழங்கினர்.

கிளைச் செயலாளர்கள் சங்கர், ராமச்சந்திரன், குமார், ஐ. டி. , பிரிவு நிர்வாகிகள் கண்ணன், குணா, கஜேந்திரன், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மாலா, பேபி, சகுந்தலா, மணி, கோவிந்தபெருமாள், கனகராஜ், பூங்காவனம், செல்வம், ராஜா, சுமதி, சுதா.

தே. மு. தி. க. , நிர்வாகிகள் சங்கர், சசி, மோகன், அருணகிரி, ஆறுமுகம், ரமேஷ், சுரேஷ், கலையரசன் உட்பட பலர் பங்கேற்றனர். ஓட்டுகேட்ட கையோடு, தனது வீட்டில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு தடபுடலாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி