திண்டிவனத்தில் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நகர மன்ற உறுப்பினர்கள் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிளை வழங்கி பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம், ஒலக்கூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சொக்கலிங்கம், திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்தன், துணை அமைப்பாளர் டி. கே. பி ரமேஷ் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினரும், நகர மன்ற உறுப்பினருமான சீனி. சின்னசாமி, அரசு ஒப்பந்ததாரர் நந்தா, நகர பொருளாளர் சின்னா ராஜேந்திரன், சாரங்கபாணி, பிர்லா செல்வம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் M. D. பாபு, இளங்கோவன், குணசேகர், பார்த்தீபன், சத்தீஷ், பரணிதரன், சுதாகர், சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.