செம்மண் குவாரி வழக்கில் சாட்சியம் பல்டி

83பார்த்தது
செம்மண் குவாரி வழக்கில் சாட்சியம் பல்டி
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், நேற்று மேலும் ஒரு அரசு தரப்பு சாட்சி பிறழ் சாட்சி அளித்தார்.

விழுப்புரம் மாவட்டம், பூத்துறை செம்மண் குவாரியில், விதிமீறி செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம். பி. , உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கில் உள்ள 67 அரசு தரப்பு சாட்சிகளில் இதுவரை 22 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். நேற்று நடந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பின் 23வது சாட்சியாக ஆஜரான, ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சம்பத், அப்போதைய மாவட்ட குற்றப்பிரிவு அலுவலக அதிகாரிகள் வற்புறுத்தலின் பேரில், கோப்புகளில் கையெழுத்திட்டேன். எனக்கு வேறு எதுவும் தெரியாது என பிறழ் சாட்சியம் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை நாளை (இன்று) ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் இதுவரை விசாரிக்கப்பட்ட 23 பேரில் 19 பேர் பிறழ் சாட்சி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி