செஞ்சி ஒன்றியம், நாகலாம்பட்டு, மாதப்பூண்டி, செத்தவரை, தடாகம் கிராமங்களில் ஆரணி தொகுதி தி. மு. க. , வேட்பாளர் தரணிவேந்தனுக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்த அவர் பேசுகையில், 'சட்டசபை தேர்தலில் தி. மு. க. , வை வெற்றி பெற செய்தீர்கள். அதன் பயனாக இல்லம் தோறும் ஸ்டாலினின் திட்டங்கள் சென்றுள்ளன.
மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் இருந்த உரவிலை என்ன இப்போது என்ன விலை என விவசாயிகளுக்கு நன்றாக தெரியும். தேசிய அளவில் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கேட்டு இந்தியா முழுதும் இருந்து வந்திருந்த விவசாயிகள் டில்லியில் போராடினார்கள். அவர்களிடம் பேச்சு வார்த்தை கூட நடந்த முன்வராத மோடி அரசாங்கம், எதிரிகளை தாக்குவதை போல் துணை ராணுவத்தை கொண்டு கண்மூடித்தனமாக தாக்கியது. தாக்குதலில் பல விவசாயிகள் இறந்தனர்.
தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த போது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். விவசாயிகளின் பல ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்தார். 10 ஆண்டுகாலம் அ. தி. மு. க. , ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை. விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பை தரவில்லை. முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டில் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பை வழங்கினார்.
நாடும், வீடும் நலம் பெற தி. மு. க. , வேட்பாளர் தரணிவேந்தனுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போடுங்கள்' என்றார்.