கிராமத்து பின்னணியில் படம் எடுத்து புகழ் பெற்றவர் இயக்குனர் முத்தையா. இவர் கடைசியாக இயக்கிய படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். தற்போது, இயக்குனர் முத்தையா தனது அடுத்த படத்திற்கான வேலையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, இவரின் அடுத்த படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் விக்ரம் பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் 'தேவராட்டம்' படத்திலும், விக்ரம் பிரபு 'புலிக்குத்தி பாண்டி' படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.