டிவி வாங்க கட்டிய 25000 பெற்றுதருமாறு மாற்றுத்திறனாளி மனு

63பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வெள்ள குட்டை பகுதியை சார்ந்த சிவராமன் மகன் பழனி என்பவர் தனது மனைவி மஞ்சுளா 25 ஆயிரம் டிவி எடுத்ததாகவும் பணத்தை வாங்கி கொண்டு டிவி ரிப்பேர் ஆகிவிட்டது டிவி கொடுக்க மறுக்கிறார்கள் எனக்கு பணத்தைப் பெற்றுக் கொடுங்கள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

அவர் அந்த மனுவில் நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன் 75% மாற்றுத்திறனாளியாக உள்ளேன். எனது மனைவி மஞ்சுளா ஸ்ரீ சப்தகிரி குரூப்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பர்னிச்சர்ஸ் ஷோரூமில் 25 ஆயிரம் ரூபாய் டிவி ஸ்டவ் வாங்குவதற்கு பணத்தைக் கட்டி வந்ததாகவும், வாங்கிய சிறிது நாட்களில் டிவி ரிப்பேர் ஆகிவிட்டது இதை எடுத்துக் கொண்டு பணத்தை கொடுக்க மறுப்பதாகவும் தன்னுடைய பணத்தைப் பெற்றுத் தருமாறு பழனி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இதனைப் பெற்றுக் கொண்டு அதிகாரிகள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாற்றுத்திறனாளிக்கு உத்தரவிட்டுள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி