சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

72பார்த்தது
சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க மக்கள் கோரிக்கை!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் ஏரி கடை வாசல் அருகே கடந்த சில வருடங்களுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணை முழுவதும் சேதம் அடைந்து, தரை தளத்தில் அமைக்கப்பட்டிருந்த கருங்கல் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இந்த தடுப்பணையை சீரமைத்து, கால்நடைகளுக்கு குடிநீர் பயன்படும் விதமாக தடுப்பணை உள்பகுதியை தூர் வார வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி