மர்ம விலங்கு ஆடுகளை கடித்து எட்டு ஆடு பலி.

80பார்த்தது
வாணியம்பாடி அருகே பண்ணை வீட்டு வளாகத்தில் மர்ம விலங்கு புகுந்து ஆடுகளை கடித்து குதரியதில் 8 ஆடுகள் பலி. வனத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பழைய வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பண்ணை வீடு உள்ளது. பண்ணை வீட்டு வளாகத்தில் ஆடு, மாடு, கோழி, வாத்து மற்றும் நாய்கள் வளர்த்து வருகிறார். இதனை குமார் என்பவர் பராமரிப்பு செய்து வருகிறார். குமார் தினந்தோறும் காலை 6 மணி அளவில் வேலைக்கு வந்து மாலை 6 மணிக்கு வேலை முடித்த பின்னர் வீட்டிற்க்கு சென்று விடுவார்.

இந்நிலையில் பண்ணை வீட்டு வளாகத்தில் நேற்று இரவு புகுந்த மர்ம விலங்கு பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 22 ஆடுகளில் 10 ஆடுகளை கடித்து குதறியுள்ளது, இதில் 8 ஆடுகள் குடல் சரிந்து பரிதாபமாக பலியாகி இருந்தது.

இன்று காலை 6 மணிக்கு வழக்கம் போல் குமார் பண்ணை வீட்டிற்க்கு பணிக்கு சென்றுள்ளார். அப்போது ஆட்டு பட்டியில் ஆடுகளை மர்ம விலங்கு கடித்து ஆடுகள் குடல் சரிந்து இரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சம்பவம் குறித்து பண்ணை உரிமையாளர் ராஜேஷ்க்கு தகவல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி