வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்!

66பார்த்தது
வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே இந்திரா காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சி மாவட்ட விவசாய அணி சார்பில் தமிழக பா. ஜனதா தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி மாவட்ட விவசாய அணி துணை ஒருங்கிணைப்பாளர் சையத் புர்ஹானுதீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் எஸ். பிரபு கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இ்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது பொய் குற்றச்சாட்டுகள் கூறிய அண்ணாமலையை கண்டித்து கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னதாக அண்ணாமலை உருவ பொம்மையை எரிப்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் கொண்டு வந்தனர். அதனை போலீசார் பறிமுதல் செய்ததால் காங்கிரஸ் கட்சியினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்ஸ்பெக்டர் ஜீப்பை சிறைபிடித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி