7 கி. மீ மருத்துவமனைக்கு நடந்து சென்ற முதியவர் உயிரிழப்பு

77பார்த்தது
வாணியம்பாடி அருகே முறையான சாலை வசதி இல்லாத நெக்னாமலை கிராமத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தூரம் மருத்துவமனைக்கு நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை மலை கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (65), மனைவியை இழந்து மலைகிராமத்தில் தனிமையில் வசித்து வரும் நிலையில், இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது,

இதனால் அவர் முறையான சாலை வசதி இல்லாத நெக்னாமலை கிராமத்தில் இருந்து மண்சாலையில் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஆலங்காயம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மருந்தகத்தில் மாத்திரைகள் வாங்கி கொண்டு இருந்த போது அவர் திடீரென உடல் சோர்வாகி மயங்கி விழுந்துள்ளார்,

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து அவரது உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, முனுசாமியின் உடலை அவரது உறவினர்கள் நெக்னாமலை அடிவாரத்தில் இருந்து சின்னதிரை நடிகர் பாலா அளித்த ஆம்புலன்ஸ் மூலம் மலை கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி