திருப்பத்தூர்: தலை நசுங்கி இளைஞர்கள் பலி

7845பார்த்தது
திருப்பத்தூர்: தலை நசுங்கி இளைஞர்கள் பலி
திருப்பத்தூரில் தியான வகுப்புக்கு சென்ற இரு இளைஞர்கள் அரசு பேருந்தில் மோதிய விபத்தில் தலைநசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த முல்லை பகுதியைச் சேர்ந்த முருகேஷ் மகன் பிரவீன் குமார் (27) அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அருள்குமார் (24) அங்கே இருவரும் திருப்பத்தூரில் உள்ள தியான வகுப்புக்கு சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் அதே போல் வந்து கொண்டிருந்தனர். அப்போது திருப்பத்தூர் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆலங்காயம் வரை அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கூடப்பட்டு அருகே பேருந்து வந்து கொண்டிருந்தபோது பள்ளி வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தில் முன்பு சென்றதால் அதை முந்தி செல்ல இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் சென்றபோது நேர் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

டேக்ஸ் :