ஜோலார்பேட்டை: ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி

4668பார்த்தது
ஜோலார்பேட்டை: ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி. இவரது மகன் கோவிந்தன் (வயது 23). இவர், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள கேண்டினில் வேலை செய்து வந்தார். இவர், ஏலகிரி ஏரிக்கரை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்ற போது, ஏரியில் தவறி விழுந்துள்ளார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏரியில் இருந்து கோவிந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி