நாட்டு வெடி வெடித்து மாட்டின் தாடை கிழிந்தது!

74பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் அருகே செட்டேரிடேம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (50). அதேப்பகுதியில் 5 ஏக்கர் நிலம் வாங்கி மா செடிகள் வைத்து விவசாயம் செய்து வந்துள்ளார். மாந்தோப்பில் கொட்டகை அமைத்து 6 காளை மாடுகளை வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அண்ணாதுரை 2 காளை மாடுகளை நிலத்தில் உள்ள கொட்டகைக்கு வெளியே கட்டிவிட்டு, 4 மாடுகளை வீட்டுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் அதிகாலை நிலத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது கொட்டகை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. மேலும் நாட்டு வெடிகுண்டு வெடித்து காளை மாட்டின் வாய் கிழிந்து ரத்தம் வழிந்தவாறு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கொட்டகையில் எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வாணியம்பாடி வனச்சரக அலுவலர் குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு யாராவது வன விலங்குகளை வேட்டையாட வைத்த நாட்டு வெடியை காளை மாடு கடித்து வாய் கிழிந்து படுகாயம் அடைந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி