வடமாநில வாலிபர் மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

52பார்த்தது
*திருப்பத்தூர் அருகே வடமாநில வாலிபர் மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து மரத்திலிருந்து குதித்ததால் பரபரப்பு. பந்தல் விரிப்பை பிடித்து வாலிபரை காப்பாற்றிய பொதுமக்கள். *

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 32 வது வார்டு காமராஜர் நகர் பகுதியில் திடீரென சத்தீஸ்கர் மாநில வாலிபர் ஒருவர் மரத்தின் மீது ஏறியதை கண்ட அப்பகுதி மக்கள் சந்தேகித்து வாலிபரிடம் பேச்சு கொடுத்த பொழுது பொதுமக்களின் கேள்விகளுக்கு செவி சாய்க்காத அந்த வாலிபர் மரத்தின் உச்சிக்கு ஏறிச் சென்று தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கும் தீயணைப்பு காவலர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு காவலர்கள் மரத்தின் மீது ஏறி கயிறு மூலமாக வாலிபரை மீட்க சுமார் 2 மணி நேரமாக முயற்சி செய்தபோது தீயணைப்பு காவலர்கள் முன்னேறி செல்ல செல்ல அந்த வாலிபர் பின்னோக்கி நகர்ந்து சென்று மரத்தின் உச்சியில் உள்ள கிளை பகுதிக்கு சென்ற பின்பு வேறு வழியின்றி மரத்தின் உச்சியில் இருந்து கீழே குதித்தார்.

தொடர்புடைய செய்தி