கன்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தல் - இரு வாலிபர்கள் கைது!

56பார்த்தது
திருப்பத்தூர் அருகே உள்ள வெங்களாபுரம் பகுதியில் திருப்பத்தூர் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் லாரியில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் குரும்பேரியை சேர்ந்த ரவீந்திரன் (24), சிம்மனபுதூரை சேர்ந்த பூபாலன் (29) என்பது தெரிய வந்தது.

இவர்கள் 2 பேரும் திருப்பத்தூரில் உள்ள ஒரு மோட்டார்சைக்கிள் கம்பெனியில் இருந்து மோட்டார் சைக்கிள்களை லாரியின் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வேலை செய்துவருகின்றனர். இவர்கள் திருப்பத்தூரில் இருந்து லாரி மூலம் மோட்டார்சைக்கிள்களை ஒடிசாவில் உள்ள மோட்டார்சைக்கிள் கம்பெனியில் இறக்கி விட்டு, அங்கிருந்து கஞ்சா வாங்கி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் லாரி, 6 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி