திருப்பத்தூர் அருகே குட்டையில் வாலிபர் பிணம்!

63பார்த்தது
திருப்பத்தூர் அருகே குட்டையில் வாலிபர் பிணம்!
திருப்பத்தூர் அருகே தில்லைநகர் பகுதியில் உள்ள ஒரு குட்டையில் 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்ற பொதுமக்கள் திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் டவுன் போலீசார் சென்று குட்டையில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? , எந்த ஊரை சேர்ந்தவர்? , எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி